Tuesday, August 08, 2006

யாராச்சும் இருக்கிங்களா?

“கண்கள் எதுக்காக இருக்கு தெரியுமா சார்?”

கேட்கிறார் அவர். அவரே பதிலையும் சொல்கிறார்... “பார்க்குறதுக்காகவும் அழறதுக்காகவும்தான். ஆனா என் கண்களுக்கு அந்த ரெண்டு உபயோகமும் இல்ல. விரலின் விளிம்புகளே எனக்குக் கண்கள், தடவிப்பார்த்துதானே எதையும் உணருகிறேன் நான். அப்புறம்.. இப்படி ஒரு கஷ்டத்தை எனக்குக் கொடுத்துட்டியே ஆண்டவான்னு நான் எப்பவும் அழுதது கிடையாது. அழுது என்னாகப் போகுது சார்!”

பள்ளிக்காலத்தில் பார்வை இழந்த அவர் பெயர் ஜெயபால். ஒரு கவிஞர். மிகவும் ஏழ்மையான விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்.

நண்பர்களின் உதவியால் பி.ஏ., பி.எட்., படித்திருக்கிறார். தொடர்ந்து படிக்க ஆசை. ஆனால் வறுமை வழிதர மறுக்கிறதே!

“பிச்சை எடுத்தாவது கற்கை நன்றுன்னு திருவள்ளுவர் சொல்லியிருக்கார். எத்தனையோ நண்பர்கள் உதவி செஞ்சதாலதான் இந்த அளவுக்கு நான் வந்திருக்கேன். வயிற்றுப் பாட்டையும் பார்த்தாகணுமே. சோப்புக்கும் சீப்புக்கும் தினசரி சாப்பாட்டுக்கும் அடுத்தவங்களிடம் எதிர்பார்க்கலாமா” எனக் கேட்கும் ஜெயபால் ஒரு சினிமா பாடலாசிரியரும் கூட!

30-07-2006 தேதியிட்ட குங்குமம் வார இதழில் அவர் பற்றிய கட்டுரை வெளியாகி உள்ளது. பார்க்கவும். எந்த வகையிலாவது அவருக்கு உதவ முடிந்தால் கரம் நீட்டவும். குறைந்தபட்சம் ஒரு ஆறுதல் போனாவது போடலாமே!

பக்கம் எண்: 74
பக்கம் எண்: 75
பக்கம் எண்: 76

ஜெயபால் மொபைல் எண்: +91 98948 29212

3 comments:

இராம்/Raam said...

கெளதம்,

கிளம்புற அவசரத்திலே இருக்கேன். காலையிலே வந்து படிச்சிட்டு முழுசா பின்னூட்டம் போடறேன்.

G Gowtham said...

ஹே ராம்?!

G Gowtham said...

ஹலோ...
யாராச்சும் இருக்கிங்களா??????