Tuesday, November 07, 2006

நினைத்தால் சுடும்! /எப்படி?எதற்கு?ஏன்?


சொல்லிக்கொள்ளாமல் வீட்டை விட்டு வெளியேறினான் ஒருவன். கடுமையான தவம் புரிந்து கடவுளைக் கண்டான்!

“பக்தா உன் தவத்தை மெச்சினோம். என்ன வேண்டும் கேள்” என்றார் கடவுள்.

“எதிரே இருப்பவர் யாராக இருந்தாலும் அவரது மனதில் என்ன நினைக்கிறார் என்பதை அறியும் சக்தி எனக்கு வேண்டும்” என்றான் பக்தன்.

“தந்தேன் போ” எனச் சொல்லிவிட்டு மறைந்தார் இறைவன்.

வீட்டை நோக்கி நடந்தான் பக்தன். வழியில் எதிர்ப்பட்ட நண்பன், “என்னாச்சு உனக்கு? ரொம்ப நாளா ஆளையே காணோமே! என்னமோ ஏதோன்னு நான் பயந்துட்டேன்!” என்றான். ‘நீ இன்னும் சாகலியா? ஊருக்கும் உறவுக்கும் பயன்படாத உனக்கெல்லாம் உயிர் ஒரு கேடா?’ என அவனது மனம் கேட்டதையும் அறிந்தான் பக்தன். கோபத்தோடு அவனைவிட்டு விலகி நடந்தான்.

வீடு எதிர்ப்பட்டது. நுழைந்தான். ஓடிவந்து கட்டிக் கொண்டாள் மனைவி. “உங்களைத் தேடாத நாளில்லை. நல்லவேளை நான் கும்பிட்ட தெய்வமெல்லாம் என்னைக் கைவிடலை. நீங்க எனக்கு திரும்பக் கிடைச்சுட்டீங்க!” என்றாள் மனைவி. அவள் மனமோ, ‘அடப்பாவி. நீ திரும்ப வரவே மாட்டேன்னு நினைச்சு வேற ஒருத்தனைக் கல்யாணம் பண்ணிக்க முடிவு செஞ்சுட்டேனே. உசுரோட வந்து நிக்கிறியே’ என்றது.

கலங்கி விட்டான் பக்தன். அன்று இரவே மறுபடியும் வீட்டைவிட்டு வெளியேறினான். மறுபடியும் கடுந்தவம். மறுபடியும் கடவுள் தோன்றினார்.

“பக்தா மறுபடியும் உன் தவத்தை மெச்சினோம். என்ன வேண்டும் கேள்” என்றார். ‘அடச்சே! அதே லொள்ளுப் பார்ட்டியா? மறுபடியும் வந்துட்டியா? உன்கூட ஒரே பேஜாராப் போச்சு போ! சரிசரி, என்ன வரம் வேணும்னு சீக்கிரம் கேட்டுத்தொலை’ என்றது கடவுளின் மனம்!

நொறுங்கிப் போனான் பக்தன். அவன் என்ன வரம் கேட்டிருப்பான்?


?

?

?

?

?

?

?

“எதிரே இருப்பவர் தன் மனதில் நம்மைப்பற்றி என்ன நினைக்கிறார் என்பதைத் தெரிந்து கொண்டால் இவ்வுலகில் யாரோடு யாருமே நட்பாக இருக்கமுடியாது என்ற உலக உண்மையை உணர்ந்து கொண்டேன் இறைவா. எனக்கு நீங்கள் கொடுத்த பழைய வரத்தை கேன்சல் செய்துவிடுங்கள் உடனடியாக!” என்றான் பக்தன்.

முந்தைய 'எப்படி?எதற்கு?ஏன்?'

4 comments:

Anonymous said...

adra sakka

சுபமூகா said...

அருமையான கதை. சிரிக்க வைத்தது, கூடவே சிந்திக்கவும் வைத்தது!

[ஆமா, இதெல்லாம் ஒரு கதைன்னு போட்டு அது கூட
ஒரு படமும் போட்டு!]

;-)

Anu said...

Good One
But sometimes..if others think positive of us..and doesnt frankly tell us...
it could be useful..so he cud have asked the God that whenever someone thinks positive of him only that He should hear..;)

Anonymous said...

²ý §ÅÈ ¿øÄ Å¢„Âò¨¾ «ÅÉ¡Ä ¸ñÎÀ¢Êì¸ ÓÊ¡¾¡? ±ôÀ×õ ²ý …¡÷ ­¦¸ð¼¨¾§Â ¿¢¨ÉîÍ ¿¢¨ÉîÍì ¦¸¡øÈ£í¸? ¿øĨ¾ ¿¢¨ÉîÍ ±ØÐí¸ …¡÷?

«ôÒÈõ «Ê§Âý ¡ÕýÛ ¸ñÎÀ¢Ê?