Monday, August 04, 2008
திரையுலகம் வரவேற்கிறது!
அருமையான ப்ராஜக்ட் ஒன்று என் கவனத்துக்கு வந்திருக்கிறது. இரையைப் பங்கு போட்டுக் கொள்ளக் கரையும் காகம் போல இதோ உங்கள் கவனத்துக்கும் எடுத்து வைக்கிறேன்.
தமிழில் மிகப் பெரிய வெற்றியடைந்த சமீபத்திய திரைப்படம் அது. மீடியாக்களாலும் மக்களாலும் திரைப்பிரமுகர்களாலும் பாராட்டப்பட்ட படமும்கூட(நிச்சயம் நீங்களும் ஒப்புக் கொள்வீர்கள்)! படத்தின் தெலுங்கு உரிமையை வாங்கியிருக்கிறார் என் நண்பர் ஒருவர். யானைக்கு முன்னே வரும் மணியோசையாக முதலில் பாடல்களைக் களமிறக்கப் போகிறார். தமிழில் படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட். தெலுங்கிலும் அதுவே நடக்கும் என நம்புகிறார். எனக்கும் நம்பிக்கை இருக்கிறது. இரண்டே மாதங்களில் படத்தை டப் செய்து வெளியிடப் போகிறார்.
ப்ராஜக்ட்-டின் மொத்த செலவு எழுபது லட்சம். வரவுக்கு மினிமம் கியாரண்டி ஒரு கோடி! தெலுகு தேசத்தில் இருக்கும் நண்பர்கள்(திரையுலகப் பிரமுகர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள்) வட்டாரத்தில் ஒரு ரவுண்டு விசாரித்தபோது படம் சூப்பர் ஹிட் ஆகும் என்றுதான் தோன்றுகிறது. நம்பிக்'கை' கொடுக்கும் முதலீட்டாரைத் தேடி என்னிடம் வந்தார் நண்பர். WIN WIN பார்முலா வைத்திருக்கிறார் (ஐந்து லட்சம் - நூறு நாட்கள் - ஆறு லட்சம் மினிமம் கியாரண்டி). பங்குதாரராக அல்லது மினிமம் கியாரண்டியுடன் முதலீட்டாளராக விரும்பினால் வாருங்கள். உங்கள் மின்னஞ்சல் முகவரியை அனுப்பிவையுங்கள் (presidentgowtham@gmail.com). முழுமையான விவரம் அனுப்புகிறேன்.
தடபுடல் விருந்து தயாராகிக் கொண்டிருக்கிறது.. நான் சாப்பிடப் போகிறேன். உங்களுக்கும் வேண்டுமெனில் ஓடிவாருங்கள்!
Saturday, June 14, 2008
வலைப்பதிவவர்களுக்கு கமல்ஹாசனின் கோரிக்கை!
சினிமா விமரிசகர்களின் பேனாக்களில் வெகுசில பேனாக்களே விலைக்கு வாங்க முடியாதவை! வலைப்பதிவர்களின் பேனாக்களையும் இந்த ஜாதியில் சேர்த்துக்கொள்ள முடியும் என்று சொல்லிக்கொள்வதில் நான் பெருமளவு பெருமைகொள்கிறேன்.
ஃப்ரான்ஸ் இயக்குநர் ஃப்ரான்ஸ்வாட்ருஃபோ(Francosisc Truffaut) தனது புத்தகம் ஒன்றில் சொன்ன கருத்து இது.. “இசை, ஓவியம், நடனம் போன்ற கலை வடிவங்களை விமர்சிக்க, அக்கலையின் பரிமாணங்களோ அல்லது அந்தக் கலையேகூடத் தெரிந்திருக்க வேண்டுமென்பது வழங்கி வரும் நியதி. ஆனால் சினிமாவுக்கு அந்தக் கட்டுப்பாடு இல்லவே இல்லை. சினிமாவை யாரும் விமர்சிக்கலாம்”.
“யாரும் விமர்சிக்கலாம்” என்பதில் அவரின் பெருந்தன்மையும் சினிமாவை ஒரு மக்கள் கலையாக்க வேண்டும் என்ற உத்வேகமும் தெரிகிறது; புரிகிறது.
நான் அக்கருத்திலிருந்து சற்று வேறுபடுகிறேன். தொடுத்த பூமாலையை யார் கையிலும் கொடுக்கலாம். அதை வாங்க அருகதையற்றவன் என்பவன் எந்த ஜாதியிலும் இல்லை.
ஆனால் குரங்கின் கையில் கொடுப்பது நல்லதா?!
பூமாலையின் நலம் கருதினால் - நல்லதே அல்ல.
'பாவம் குரங்கு' என்று குரங்குக்கு சம உரிமை கேட்கும் அபாரப்பெருந்தன்மை திரு. ட்ருஃபோவிற்குக்கூட இருக்காது. இருக்கவும் கூடாது என்று நினைப்பவன் நான்.
சினிமாவை ஏற்கனவே தொடுத்தவர்களிடமிருந்து சிரமமில்லாமல் வாங்கி விற்கும் சில்லரை வியாபாரிகளின் சினிமாவை யாரும் விமர்சிக்கலாம் என்ற அனுமதியை சௌகர்யம் கருதி அந்த வியாபாரிகளே தந்துள்ளனர். ஆனால் செடி வளர்த்து, பூத்த பூவை தொடுத்து விற்பவனுக்கு குரங்குச் சேட்டைகள் தாங்கொணா சோகமாகும்.
நல்ல ஒரு மனிதன் குரங்குகளைக்கூட நல்ல வேலைக்குப் பயன்படுத்த முடியும் என்பதற்கு உதாரணக்கதை - ராமன் கதை. இப்படிப்பட்ட உதாரண புருஷர்கள் சிலரும் இங்கே வலையுலகில் தசாவதாரம் படத்துக்கு நல்லபடியான விமர்சனம் எழுதியுள்ளார்கள் என்பதையும் நான் ஒப்புக்கொள்ளக் கடமைப்பட்டுள்ளேன்.
ஏனைய பல குரங்கர்கள் மேலும் சினிமாவை நன்கு ஆராய்ந்து அறிந்து மேம்பட வாழ்த்துக்கள். வாழ்த்து பலித்தால் அவர்களது நாளைய விமர்சனங்கள் எதிர்கால கலைஞர்கள் படிக்கும் பாடமாகும்.
பின் குறிப்பு: பல வருடங்களுக்கு முன் ‘வாசுகி' இதழில் வெளியான கமல்ஹாசனின் ஒரிஜினல் கடிதம் இது. அக்கடிதத்தில் ஒரு சில வார்த்தைகளை மட்டும் சாய்வாகச் சேர்த்து (italics) இங்கே மறுபிரசுரம் செய்துள்ளேன். :-)

