Friday, July 21, 2006

அலிபாபாவும் 45 திருடர்களும்/ எதற்கு? ஏன்? எப்படி? 5


'அலிபாபாவும் நாற்பது திருடர்களும்' கதையைக் கேள்விப்பட்டு இருக்கிறீர்கள்தானே?

அலிபாபாவின் கண்களில் படுவதற்கு முன்பு அவர்கள் மொத்தம் நாற்பத்தைந்து பேராகத்தான் இருந்தனர்!

ஒரு நாள்... திருடப் போகும்போது வழியில் எதிர்ப்பட்ட அழகான பெண் ஒருத்தியைப் பார்த்து அசந்து போனார்கள் அந்த ஐந்து பேரும். அன்று இரவு முழுக்க தூக்கம் பிடிக்கவில்லை. அவளது அழகிய முகத்தை
அவர்களால் மறக்க முடியவில்லை!

ஐந்து பேருமே அந்தப் பெண் மீது காதல் வயப்பட்டனர். தனித்தனியே அவளைச் சந்தித்து தங்கள் காதலைத் தெரிவித்தனர்.

அவள் ஒரு நிபந்தனை விதித்தாள். ''திருட்டுத் தொழிலுக்கு முழுக்குப் போட்டுட்டு வாங்க. உங்க காதலைப் பரிசீலனை செய்கிறேன்'' என ஐவரிடமும் தனித்தனியே சொன்னாள்.

முதலாவது திருடன் திருட்டை நிறுத்த முயன்று, அது முடியாமல் போகவே, அவளை மறக்கவும் முடியாமல் திணறி, புத்தி பேதலித்து கூட்டத்தைவிட்டே காணாமல் போனான்.

இரண்டாவது திருடன் திருந்திவிட்டான். அதைப் பொறுக்காத நாற்பது திருடர்களும் சேர்ந்து அவனைத் தீர்த்துக்கட்டி விட்டார்கள்.

மற்ற மூவரும் நாற்பது திருடர்களுக்கும் டிமிக்கி கொடுத்துவிட்டு, திருந்திய நபர்களாக அந்தப் பெண்ணைச் சந்தித்தனர்.

மூவரில் தனக்குப் பிடித்த ஒருவனைக் காதலிக்கச் சம்மதித்தாள் அந்த அழகுப் பெண்.

காதல் தோல்வியைத் தாங்கமாட்டாமல் தற்கொலை செய்துகொண்டான் அடுத்தவன்.

இன்னொருவனோ, 'எங்கிருந்தாலும் வாழ்க' என வாழ்த்திவிட்டு விவசாயம் பார்க்கப் போய்விட்டான்.

இதிலிருந்து தெரியவரும் நீதி என்ன தெரிகிறதா?

?

?

?

?

?

?

?

நீதி: எது எப்படி இருந்தாலும்... ஒருவன் செய்து கொண்டிருக்கும் தவறுகளை எப்படியேனும் நிறுத்தச் செய்யும் வலிமை கொண்டது காதல்!

4 comments:

கார்த்திக் பிரபு said...

unmai than kadhal nalla irupavanai thirudanakum ..thirudana irukiravani nallvanaakum..

G Gowtham said...

கார்த்திக்,
காதலால் நல்லது நடப்பதே அதிகம் என்பது என் கருத்து.

G Gowtham said...

Yes! Kankalukkagave antha pugaip padap pennaik kathalikka arambichutten!!

அபு மர்வான் said...

விவசாயத்தப் பாக்கப் போனவந்தான் புத்திசாலி - இது என் கணிப்பு.
இதுக்கும் அந்த பெண்மேல் அவன் கொண்ட காதல்தான் காரணம்.