Saturday, August 12, 2006

முஹம்மது(ஸல்)நபியின் மன உறுதி - எதற்கு? ஏன்? எப்படி?

போர்க்களம் அது!

இறைத்தூதர் அண்ணல் முஹம்மது(ஸல்) நபியும் அவரது சஹாபி(பின்பற்றி நடப்பவர்கள்)க்களும் கொஞ்சமும் எதிர்பாராத ஒரு நேரத்தில் தாக்குதலுக்கு வருகிறார்கள் எதிரிகள்.

கொலைவெறியோடு அவர்கள் வருவதைக் கேள்விப்பட்டதும் யோசிக்க சிறிது அவகாசம் வேண்டி மறைந்திருக்க முடிவெடுத்தனர் அண்ணல் முஹம்மது(ஸல்) தலைமையிலான அனைவரும். அதன்படியே புதர் ஒன்றில் பதுங்கினர், பாயத்தயார்ப்படுத்திக் கொள்ளும் புலிபோல.

கொலைகாரர்கள் குதிரைகளில் வந்தனர். கையில் பயங்கரமான ஆயுதங்கள்!

மறைந்திருந்தவர்களில் ஒரு சஹாபி சற்றே பயத்துடன் கேட்டார்.. "எதிரிகள் நம்மைக் கண்டு கொண்டால் என்ன செய்வ்து? இன்றே நாம் மடிந்துவிடுவோமா?"

அதற்கு அண்ணல் முஹம்மது(ஸல்) சொன்ன பதிலில் அவரது மன உறுதி தெரிந்தது. கூட இருந்த அத்தனை பேருக்கும் அந்த மன உறுதி பற்றிக்கொண்டது!

அப்படி என்ன சொன்னார் தெரியுமா அண்ணல் முஹம்மது(ஸல்) நபி அவர்கள்?

?

?

?

?

?

?

?

"நான் அல்லாஹ்வின் தர்மத்தை இவ்வுலகில் நிலை நிறுத்தும் பொருட்டு வந்திருக்கிறேன். என் காரியம் நிறைவேறும்வரை எனக்கு மரணமில்லை. என்னுடன் இருப்போர் தாங்களும் இதே நோக்கோடு வந்திருப்பதாக நம்புங்கள். பயப்படாதீர்கள். நம் காரியம் நிறைவேறும்வரை யாருக்கும் மரணமில்லை!"

2 comments:

ALIF AHAMED said...

அருமை

தன்னம்பிக்கை வரிகள்.

Anonymous said...

mika nallakarutthu vaztthukkal