Monday, October 30, 2006

வலிக்குதா கண்ணா?/எப்படி? எதற்கு? ஏன்?


ராமுவும் சோமுவும் பள்ளித் தோழர்கள். பக்கத்து வீட்டுக்காரர்களும் கூட.

விடுமுறை நாளில் தங்கள் அப்பாக்களின் சைக்கிளை எடுத்து ஓட்டிப்பழக ஆசைப்பட்டனர். பெற்றோரிடம் அனுமதி கேட்டனர்.

“வேண்டாம் நீங்கள் சின்னப் பையன்கள். சைக்கிள் உயரம்தான் உங்களுக்கு. இன்னும் கொஞ்சம் வளர்ந்தபிறகு பெரிய சைக்கிள் ஓட்டலாம்” என்றார்கள் பெற்றோர்.

தங்கள் ஆசை ஏமாற்றத்தில் முடிவதை விரும்பாத பொடியன்கள் இருவரும் அவரவர் வீட்டிற்குத் தெரியாமல் அப்பாக்களின் சைக்கிள்களை லவட்டிக்கொண்டு வெளியேறினர். தட்டுத்தடுமாறியபடி ஓட்டப்பழகினர். பாவம், கீழே விழுந்து ரத்தக் காயங்களுடன் வீடு திரும்பினர்!

“சைக்கிளை எடுக்காதேன்னு சொன்னேன்ல, கேட்டியா? ராஸ்கல்.. இனிமே எடுப்பியா?” என்று அதட்டி ராமுவுக்கு நாலு அறை கொடுத்தனர் அவன் பெற்றோர்.

“பெரியவங்க சொல்பேச்சு கேட்காததால இப்படி ஆகிடுச்சு பார்த்தியா” என்று கண்டித்த சோமுவின் பெற்றோர், பையனின் காயத்தைப் பார்த்து பதறினர். “வலிக்குதா கண்ணா?” எனக்கேட்டு மருந்திட்டனர். “காயம் ஆறட்டும். அப்புறம் ஒரு நாள் அப்பாவைக் கூட்டிட்டு கிரௌண்டுக்குப் போயி சைக்கிள் ஓட்டிப்பழகலாம்” என்றாள் சோமுவின் அம்மா.

இதுவரை நடந்தது ஃப்ளாஷ்பேக்! இனி நிகழ்காலம்!!

ஒன்றாகவே கல்லூரிப் படிப்பு முடித்தனர் ராமுவும் சோமுவும். வேலை வாய்ப்பு தேடி அலைந்து அலுத்தனர்.

இருவரில் ஒருவன் துணிச்சலாக சொந்தத்தொழில் ஆரம்பித்து, போராடி ஜெயித்தான். மற்றவன் அந்தத் துணிச்சல் இல்லாமல் இன்னும் நியூஸ் பேப்பர் பார்த்து வெலை வாய்ப்புக்காக அப்ளிகேஷன் போட்டுக் கொண்டே இருக்கிறான்.

துணிச்சல்காரன் யார்? துணிச்சலுக்குக் காரணம் யார்? யூகிக்க முடிகிறதா?

?

?

?

?

?

?

?

யெஸ்.. சோமுதான் அந்த துணிவின் தோழன். தொழிலில் ஒருவேளை தான் தோல்வியைச் சந்திக்க நேர்ந்தால், ஆறுதல் சொல்லவும் வழிகாட்டவும் அருமைப் பெற்றோர் நம் அருகில் இருக்கிறார்களே என்ற நம்பிக்கை அவனுக்கு.!

முந்தைய 'எப்படி? எதற்கு? ஏன்?'கள் இங்கே!

5 comments:

Anonymous said...

mr gowtham neengal ungalin kulaindhaiku cycle otta katru koduthu viteergala?kulandhai irukiradha?ungal thandhai ungal munetrathirku udhavinara?ungalin profile parthen its intresting.neengal ethanai thiramisaligalai uruvaki irugareegal avargalai patri solungalen.illai ungalin munetrathirku mattum eluthareegala unmai vendum purigiradha.....pinotam vendum kandipaga .......

Anonymous said...

badilukaga kathtirukiren

Anonymous said...

badilukaga kathirukiiren mr gowtham avargaleeeeeeeeeeee

Anonymous said...

pinotam

Anonymous said...

mr gowtham ungal kulaidhaiku cycle otta theriuma?