Thursday, November 23, 2006

சிரிச்சுட்டு சிந்தியுங்க!

ரயில் தண்டவாளத்தில் பிணம் கிடக்கிறது!

இறந்தது 'யார்? எப்படி?' என்ற ஆராய்ச்சிகளுக்கு முன்னால் போலீஸார் வந்து வழக்குப் பதிவு செய்தாக வேண்டும். அதில்தான் பிரச்னையே!

சம்பவ இடத்துக்கு விரைந்துவரும் ரயில்வே போலீஸார், "பிணம் தண்டவாளத்தில் இல்லை. அதனால் நாங்கள் வழக்கைப் பதிவு செய்ய முடியாது" என்று ஜகா வாங்கிவிட்டனர்!

அந்த ஊர் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் சொல்லப்படுகிறது. வருகிறார்கள் தொந்தியும் தொப்பையுமான இரண்டு கான்ஸ்டபிள்கள்.

பிணத்தைப் பார்த்ததும் சுதாரித்துக் கொள்கிறார்கள். "தண்டவாளத்துக்கு இந்தப் பக்கம் கிடந்தால்தான் இது எங்க கேஸ். இப்ப தண்டவாளத்துக்கு அந்தப்பக்கம்ல இருக்கு. கேஸ் எங்க லிமிட்ல வராது" என்று கூறிவிட்டு எஸ்கேப்!

அந்தப்பக்கமிருந்து இரண்டு போலீஸார் வருகிறார்கள். வந்த வேகத்தில், "ரயில்ல அடிபட்டு இந்தப்பக்கம் எகிறிவிழுந்த பாடி இது. அதனால ரயில்வே போலீஸ்தான் கேஸ் பதியணும்" என்றார்கள்!

என்ன காமெடியாக இருக்கிறதா? பத்திரிகை நிரூபராக இருந்த போது நான் துணுக்குச் செய்தியாக்கிய நிஜச் சம்பவம் இது!

"அதெல்லாம் என் வேலை இல்லே" - இந்த மனோபாவம் இது!

நம்மில் பலர் அடிக்கடி சொல்லிக்கொள்ளும் அல்லது சொல்லித் தப்பிக்கும் வார்த்தைகள்தான் இவை!

இனி இந்த வார்த்தைகளை உபயோகிக்கும் முன் கொஞ்சம் யோசிப்பதற்காக உங்களுக்கு ஒரு சிரிப்புக் காட்டவா!

வாங்க புத்தம் புதிய ஜி போஸ்ட்டுக்கு!!

No comments: