Wednesday, November 15, 2006

அப்பவே சொன்னேன்ல! / எப்படி?எதற்கு?ஏன்?

கணவன் - மனைவி இருவரும் வீட்டை விட்டுக் கிளம்பினார்கள். இருவருமே அலுவலகப் பணி புரிபவர்கள்.

வெளியே வானம் மப்பும் மந்தாரமுமாய் இருந்தது!

“மழை வரப்போகிற மாதிரி தெரியுதே. வானிலை அறிக்கைலகூட சொன்னாங்கள்ல. கொஞ்சம் பொறு, நான் போய் என் ரெய்ன் கோட்டை எடுத்துட்டு வந்துடறேன்” - கணவன்.

“ம்க்கும். இவங்க வானிலை அறிக்கைப்படி என்னிக்குத்தான் நடந்திருக்க்கு? நான் சொல்றேன், மழையெல்லாம் வராது. கோட்டு எடுக்குறதுக்காக பூட்டின வீட்டை எதுக்கு திறந்துக்கிட்டிருக்கணும். ஆபிசுக்கு நேரமாச்சு, வாங்க போயிடலாம்” – மனைவி.

பைக்கை உதைத்தான். பின் ஸீட்டில் ஏறி உட்கார்ந்தாள் மனைவி.

வழியில்.. முன் ஜாக்கிரதையுடன் ஓரிருவர் ரெயின் கோட்டுடனேயே பைக் பயணம் செய்து கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு மெதுவாகச் சொன்னாள் மனைவி.. “ஏங்க, எதுக்கும் நீங்க ரெயின் கோட்டை எடுத்துட்டு வந்திருக்கலாம்”

மனைவியை அவளது அலுவலகத்தில் ட்ராப் செய்துவிட்டு தன் அலுவலகம் போய்ச்சேர்ந்தான் கணவன். சாப்பாட்டு நேரத்தில் இருவரும் மொபைல் போனில் பேசிக்கொண்டனர்.

“வானம் அப்படியேதான் இருக்கு. மழையக் காணோம்” – கணவன்.

“நான் அப்பவே சொன்னேன்ல. ச்சும்மா பயமுறுத்துது மேகம்” – மனைவி.

மாலையானதும் பிடித்துக் கொண்டது பெருமழை!

ஆட்டோ பிடித்து வீட்டுக்குக் கிளம்பினாள் மனைவி. மொபைல் போனில் கணவனை அழைத்தாள்..

“நான் ஆட்டோல வீட்டுக்குப் போயிட்டிருக்கேன்..”

“ரெயின் கோட் எடுத்துட்டு வராததால நான் ஆபீஸ்லயே மாட்டிக்கிட்டேன்”

“என்னங்க நீங்க. நான்தான் அப்பவே சொன்னேன்ல ‘நீங்க எதுக்கும் கோட்டை எடுத்துட்டு வந்திருக்கலாம்’னு”

“அடிப்பாவி! நீதானேடி வேண்டாம்னே!”

“ம்.. நானேதானே எடுத்துட்டு வந்திருக்கலாம்னும் சொன்னேன். சரி, உங்களுக்கு எங்கே போச்சு அறிவு?!”

எரிச்சலோடு போனைக் கட் பண்ணினான் கணவன்.

இந்தச் சம்பவக் கதையிலிருந்து தெரிந்துகொள்ள வேண்டிய்து என்ன என்பது தெரிகிறதா?


?


?

?

?

?

?

?

தம்பதிகளுக்கிடையே சண்டை சச்சரவுகளைத் தவிர்க்க வேண்டுமானால் இருவரும் தவிர்க்க வேண்டிய பல பேச்சுக்களில் மிக முக்கியமானது – “ நான் அப்பவே சொன்னேன்ல..”

முந்தைய 'எப்படி? எதற்கு? ஏன்?' இங்கே!

2 comments:

Anonymous said...

Neengal solvathu unmaitaan “ நான் அப்பவே சொன்னேன்ல..” ;)

Anonymous said...

அய்யா உன்மைதான் என்ன செய்வது/////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!.........................................................................................................:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;சிவஞானம் கவிதைதான் நியாபகம் வருது............