Monday, September 04, 2006

படத்தைப் பார்! சிரி!! / எப்படி? ஏன்? எதற்கு?


ஸ்ஸ்ஸ்.. கணவனுக்கும் மனைவிக்கும் கடும் சண்டை!

“போயும் போயும் உங்களைக் கல்யாணம் பண்ணதுக்கு ஒரு ஆட்டுக்கல்லைக் கல்யாணம் பண்ணி இருந்திருக்கலாம்!” - இது மனைவி.

“ச்சீ! வாயைக் கழுவு. ஆத்திரத்துல என்ன பேசுறதுன்னு விவஸ்தை வேணாம்! ஆட்டுக்கல்லோட குடும்பம் நடத்துனா என்னாகும் தெரியுமா?! சனியனே!” - இது கணவன்.

“யார் சனியன்.. நீங்கதான் சனியன். உங்களை இப்படி வளர்த்திருக்கா பாரு உங்கம்மா அவதான் சனியன்”

“யேய்.. இப்ப ஏண்டி எங்கம்மாவை வம்புக்கு இழுக்குறே?” - பாய்ந்துபோய் மனைவியை அடிக்கக் கை ஓங்கினான் கணவன்.

“நிறுத்துடா. என்ன பழக்கம் இது பொண்டாட்டிய அடிக்குறது?” என்றபடியே வீட்டுக்குள் நுழைந்தான் கணவனின் நண்பன். திடுதிப்பென வீடு அமைதியானது.

மிக நெருக்கமான நண்பன் அவன். காதலர்களாக இருந்த அவர்கள் பதிவுத்திருமணம் செய்ய ஓடி வந்தபோது உடனிருந்து நடத்திவைத்தவன். நல்ல அன்பவசாலியும்கூட. அதனால் அவன் பேச்சுக்கு அந்த வீட்டில் மறு பேச்சு இல்லை!

கணவனும் மனைவியும் ஆளுக்கொரு திசையில் முகம் திருப்பிக் கொண்டு உட்கார, பீரோவைத் திறந்த நண்பன் ஒரு பொருளை எடுத்து வந்து அவர்கள் முன் விரித்து வைத்தான். அதைப் பார்த்தபடியே கேலியும் கிண்டலுமாக கமெண்ட் அடிக்கத் தொடங்கினான்.

ஒரு கட்டத்தில் நண்பனின் கேலிப்பேசு கணவன், மனைவி இருவரையும் கோபத்தை மறந்து சிரிக்க வைத்தது! இருவரும் பாய்ந்து அந்தப் பொருளைப் பிடுங்கினர். ஆசையோடு புரட்டலானார்கள். அப்படியே ஒருவரை ஒருவர் காதலோடு பார்த்துக் கொள்ளவும் ஆரம்பித்தார்கள்.

“சரி சரி. இனிமேல் நான் எதுக்கு கரடிமாதிரி” என்ற நண்பன் “டாடா” காட்டிவிட்டு வெளியேறினான்.

சண்டைக்கோழிகளாக இருந்த இந்த தம்பதிகளைச் சேர்த்துவைத்த (எந்த தம்பதியையும் சேர்த்துவைக்கும்) அந்த மேஜிகல் பொருள் என்ன என யூகிக்க முடிகிறதா?

?

?

?

?

?

?

?

அது... 'கல்யாணப் புகைப்படங்கள் ஒட்டப்பட்டிருக்கும் ஆல்பம்!'

முந்தைய 'எப்படி? எதற்கு? ஏன்?'கள்: இங்கே!

8 comments:

லிவிங் ஸ்மைல் said...

you had given a very good idea...

Let them people to try this...

All the Best!!!

வெற்றி said...

கெளதம்,
நல்ல பதிவு.

Anonymous said...

kaadal oru arpudamaana visayam, kalyanam marakka mudiyaatha oru visayam. ungal padippu arpudam.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

அட இது கூட நல்லாயிருக்கே? எதற்கும் குறித்து வைத்தக்கொள்கின்றேன் :)

Anonymous said...

இது நல்ல பதிவு.....வாழ்த்துக்கல்

மருதநாயகம் said...

இந்த பதிவு நல்லாயிருக்கு. வாழ்த்துக்கள்

Anu said...

i used to see and make him see all the greeting cards and letters he had sent during courtship...to stop our fight..

நிலாரசிகன் said...

கெளதம் அண்ணா
இது ஒரு மிகச்சிறந்த
பதிவு.
நன்றி.